பதிவு செய்த நாள்
17 நவ2015
14:09
பிரிட்டன் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான, ஜே.எல்.ஆர்., என்று அழைக்கப்படும், ‘ஜாகுவார் லேண்ட் ரோவர்’ சொகுசு கார் உற்பத்தி ஆலையை பார்வையிட்டார். பிரிட்டனில் அதிக முதலீடு செய்திருக்கும் இந்திய நிறுவனம் என்ற பெருமையை, ஜே.எல்.ஆர்., பெற்று இருக்கிறது.
‘போர்டு’ நிறுவனத்திடம் இருந்து, அந்த ஆலையை, 2008ல் டாடா வாங்கியது. அதன் பின், அந்த ஆலை லாபத்தை பார்க்கத் துவங்கி உள்ளது. ஜே.எல்.ஆர்., ஆலையை பார்க்க மோடி விருப்பம் தெரிவித்ததை அடுத்து, அவரை டாடா குழும தலைவர் சைரஸ் மிஸ்திரி அழைத்துச் சென்று, சுற்றிக் காட்டினார். அப்போது, ஜே.எல்.ஆர்., தலைமை நிர்வாக அதிகாரி ரால்ப் ஸ்பெத் உடன் இருந்தார்.
இந்தியாவில் விரைவில் அறிமுகமாக இருக்கும், ஜாகுவாரின் ‘எக்ஸ் இ, எக்ஸ் எப் ஸ்போர்ட்’ மற்றும் புதிய, ‘எப் – பேஸ்’ ஆகிய சொகுசு வாகனங்கள் உற்பத்தி ஆவதை மோடி பார்வையிட்டார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|