பதிவு செய்த நாள்
17 நவ2015
14:13
ஹோண்டா நிறுவனம் புதிய, 125 சி.சி., பைக்கை அறிமுகம் செய்வதற்காக, முன்னோட்ட காட்சிகள் அடங்கிய, ‘டீசர்’களை அவ்வப்போது வெளியிட்டு வந்தது. அந்த நிறுவனம், தற்போது, ‘சிபி ஷைன் எஸ்பி’ என்னும் பைக்கை நவ., 19ல் அறிமுகப்படுத்த போவதாக தகவல் வெளியாகிஉள்ளது.
ஹோண்டாவின், ‘சிபி ஷைன்’ பைக் விற்பனை நிறுத்தப்பட்டு, இந்த புதிய பைக் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ‘ஸ்மார்ட் பவர்’ என்பதன் சுருக்கமே, ‘எஸ்பி!’ ஹீரோ நிறுவனம், ‘ஐஸ்மார்ட்’ பைக்கை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. அதற்கு போட்டியாக களமிறங்கும், ‘எஸ்பி’யில், ‘ஹெட்லைட், டெயில் லைட்’, சில்வர் நிறத்தில் பக்கவாட்டு பேனல்,
குரோம் கலந்த புதிய வடிவிலான சைலன்சர், செயின் கவர், என பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டிருந்தாலும், தோற்றத்தில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. பைக்கை திடீரென நிறுத்தினால் இன்ஜின் தானாக, ‘ஆப்’ ஆகிவிடும்; மீண்டும், ‘திராட்டிலை’ திருகியதும், ‘ஸ்டார்ட்’ ஆகிவிடும்,‘ ஸ்மார்ட்’ தொழில்நுட்பம் இதில் இடம்பெற்றுள்ளது. இதனால், பெட்ரோல் சேமிப்பாகும்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|