பதிவு செய்த நாள்
19 நவ2015
13:03
டாடா மோட்டார்ஸ் நிறுவனம், நாடு முழுவதும், நவ., 20 முதல், 26 வரை, இலவசமாக பழுதுபார்ப்பு சோதனை முகாம்களை நடத்த உள்ளது. இந்த முகாம்கள், 287 பெரிய மற்றும் சிறிய நகரங்களில் நடைபெறும். இத்துடன், இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் கை கோர்த்து, தேர்ந்தெடுக்கப்பட்ட, 1,000 பெட்ரோல் நிலையங்களில், வாடிக்கையாளர்களின் கார்களை பழுதுபார்த்து தர இருக்கிறது. ‘கார் வாஷ், ஜெனரல் செக்கப்’ போன்றவை இலவசமாக செய்யப்படும்.
அதே நேரத்தில், காரின் உதிரிபாகங்கள், ஆயில் மாற்றுவது உள்ளிட்ட பல சேவைகள், 10 சதவீத தள்ளுபடி கட்டணத்தில் செய்து தரப்படும். இதற்காக, 16 நிறுவனங்களுடன் டாடா மோட்டார்ஸ் கை கோர்த்துள்ளது. டாடாவின் உதிரிபாகங்கள் விலை மற்றும் பழுது நீக்கும் செலவில், 20 சதவீத தள்ளுபடி சலுகை வழங்கப்படுகிறது. இந்த நிறுவனம், நடப்பு ஆண்டில் ஏற்கனவே, இரு முறை இந்த முகாம்களை நடத்தியுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|