பதிவு செய்த நாள்
20 நவ2015
15:08
சர்வதேச அளவில், சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள போக்ஸ் வேகனின் தயாரிப்பான, ‘பீட்டில்’ கார் அறிமுகமாகி, நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் கால் பதிக்க உள்ளது. அதற்கான முன்பதிவை, போக்ஸ் வேகன் துவங்கியுள்ளது. புதிதாக அறிமுகமாக உள்ள பீட்டில் காரின் புறத்தோற்றத்தில், பழைய பீட்டில் கார் போலவே இருந்தாலும், சில அசத்தலான மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.
சதுர வடிவிலான பம்பர், மாற்றியமைக்கப்பட்ட, ‘ரூப் லைன்’ மற்றும் பெரிய சக்கரங்கள், பின்புறத்தில் புதிய தோற்றத்திலான, ‘ஸ்பாய்லர்’ என பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில், 149 குதிரைசக்தி திறனை உற்பத்தி செய்யக் கூடிய, 1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. நான்கு நிறங்களில் புதிய பீட்டில் கார் கிடைக்கும். கூரையை திறக்கும் அமைப்பு, ‘செனான்’ முகப்பு விளக்கு, தோலினால் ஆன இருக்கைகள், ‘குரோம்’ வேலைப்பாடுகள் போன்ற கவர்ச்சிகரமான அம்சங்களைக் கொண்ட இந்த காரின் டில்லி நகர ஷோரூம் விலை, 35 லட்சம் ரூபாயில் இருந்து துவங்கும் எனத்தெரிகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|