பதிவு செய்த நாள்
02 டிச2015
15:38
வாகன புகை மாசு பிரச்னையில் சிக்கிய போக்ஸ்வேகன் கார் தயாரிப்பு குழுமம், இந்தியாவில், 3.2 லட்சம் கார்களை திரும்ப அழைக்க முடிவு செய்து உள்ளது. குறிப்பாக, இஏ 189 டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட கார்களில் பிரச்னை இருக்க கூடும் என, அந்த நிறுவனம் கருதுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
போக்ஸ்வேகன், 2.10 லட்சம் கார்கள்; ஸ்கோடா, 80 ஆயிரம் கார்கள்; ஆடி, 30 ஆயிரம் கார்கள் என, அந்த குழுமத்தைச் சேர்ந்த, 3.2 லட்சம் கார்களில், புகை பரிசோதனையின் போது வெளியாகும் மாசு அளவை குறைத்து காட்டும், சாப்ட்வேர் பொருத்தப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்திடம், போக்ஸ்வேகன் நிறுவன அதிகாரிகள் ஒப்புக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
விரைவில், அந்த கார்களின் உரிமையாளர்களுக்கு அழைப்பு வரக்கூடும். அதன் பின், அந்த சாப்ட்வேர் கோளாறு சரி செய்யப்படும்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|