தங்கம் விலை இன்று(டிச.10) மாலைநிலவரப்படி ரூ.56 சரிவுதங்கம் விலை இன்று(டிச.10) மாலைநிலவரப்படி ரூ.56 சரிவு ... மழை பாதிப்பு - ரூ.2500 கோடி அளவுக்கு இழப்பீடு கேட்டு காப்பீடு நிறுவனங்களில் மனு மழை பாதிப்பு - ரூ.2500 கோடி அளவுக்கு இழப்பீடு கேட்டு காப்பீடு நிறுவனங்களில் ... ...
பச்சை மிளகாய் கிலோ ரூ.80
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 டிச
2015
14:46

பழநி: தொடர் மழையால் வரத்து குறைந்து கத்தரிக்காயை பின்னுக்குதள்ளி பச்சை மிளகாய் விலை, கிலோவுக்கு ரூ.80 ஆக அதிகரித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், பழநி சுற்றுப்புற கிராமங்களில் பல ஏக்கர் பரப்பளவில் தக்காளி, கத்தரி, அவரை, முருங்கை, பச்சை மிளகாய், காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகிறது. சில நாட்களாக மழைபெய்து வருவதால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. உழவர் சந்தை மற்றும் மார்க்கெட்களுக்கு வரத்து வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக கத்தரிக்காய் அழுகி ஒரு மாதமாக ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து தற்போது மழைக்கு மிளகாய்செடிகள் அழுகிவருவதால் வரத்து பாதியாக குறைந்துள்ளது. இதனால் கடந்தவாரம் ஒரு கிலோ ரூ.35 விற்ற பச்சை மிளகாய் தற்போது ரூ.80 ஆக உயர்ந்துள்ளது. மளிகை கடைகளில் சில்லரை விலைக்கு கிலோ ரூ.90 வரைவிற்கின்றனர்.நேற்றைய பழநி உழவர் சந்தை நிலவரம்(ஒருகிலோ) தக்காளி ரூ.40, அவரை ரூ.30, ப.மிளகாய் 60, சி.வெங்காயம் ரூ.50, பெல்லாரி ரூ. 40, முருங்கை ரூ. 120, கத்தரி- ரூ.70, வெண்டை-ரூ.24, உருளை ரூ.32, பீர்க்கங்காய் ரூ.30க்கு விற்பனையானது.
உழவர்சந்தை அதிகாரி ஒருவர் கூறுகையில்,“ மழையால் காய்கறிகளின் வரத்து குறைந்து கொண்டேவருகிறது. குறிப்பாக சில நாட்களாக கத்தரிக்காய் விலை கூடுதலாக உள்ளது. அதைவிட வரத்துகுறைந்து, பச்சைமிளகாய் கடந்தவாரத்தை விட இருமடங்கு உயர்ந்து ஒருகிலோ ரூ.80 விற்கிறது. மேலும் சென்னை, கடலுார் மாவட்டங்களில் விலை பலமடங்கு கூடுதலாக கிடைப்பதால் வியாபாரிகள் காய்கறிகளை மொத்தமாக வாங்கி அப்பகுதிகளுக்கு அனுப்புகின்றனர். இதனால் காய்கறிவிலை உயர்ந்துள்ளது,” என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)