பதிவு செய்த நாள்
11 டிச2015
13:48
மும்பை: 'அமெரிக்காவின் பெடரல் வங்கி, வட்டி விகிதத்தை உயர்த்தினால், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை கட்டுப்படுத்த, தக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, மத்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அமெரிக்காவின் பெடரல் வங்கி, 16ல், வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவ்வாறு உயர்த்தப்பட்டால், வளரும் நாடுகளின் கரன்சி கள் கடுமையாக பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி கூறியிருப்பதாவது: அமெரிக்காவின் மத்திய பெடரல் வங்கி, வட்டி விகிதத்தை உயர்த்தினால், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதை தடுக்க, தக்க நடவடிக்கை எடுப்போம். கரன்சி சந்தையில், பங்குச்சந்தைகளால் நடைபெறும் கரன்சி யூக வர்த்தகத்தில், ரிசர்வ் வங்கி தலையிட்டு, ரூபாய் வீழ்ச்சியை தடுக்கும்.இவ்வாறு ரிசர்வ் வங்கி கூறிஉள்ளது.கரன்சி சந்தையில், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியை தடுக்க, ரிசர்வ் வங்கி, அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், முதல் முறையாக, கரன்சி வர்த்தகத்தில் தலையிட்டு, சரிவை தடுக்கப் போவதாக, ரிசர்வ் வங்கி வெளிப்படையாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|