வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தைகள் கடும் சரிவு - சென்செக்ஸ் 450 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
04 ஜன2016
10:41
மும்பை : வாரத்தின் துவக்கநாளில் இந்திய பங்குச்சந்தைகள் இன்று(ஜன.4ம் தேதி) கடும் சரிவை சந்தித்து வருகின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 190.25 புள்ளிகள் சரிந்து 25,970.65 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 48.55 புள்ளிகள் சரிந்து 7,914.65 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.
ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் சரிவு, முதலீட்டாளர்கள் லாபம் நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்து வருவது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் கடும் சரிவை சந்தித்து வருவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே காலை 10.30 மணியளவில் சென்செக்ஸ் 250 புள்ளிகளுக்கு அதிகமாகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 70 புள்ளிகளுக்கு மேல் சரிந்தும் வர்த்தகமாகின.
தொடர்ந்து ஆசியா பங்குச்சந்தைகளில் குறிப்பாக சீன பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட கடும் சரிவு காரணமாக இந்திய பங்குச்சந்தைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக 11.50 மணியளவில் சென்செக்ஸ் 450 புள்ளிகளுக்கு அதிகமாகவும், நிப்டி 140 புள்ளிகளும் சரிந்தன.
ஆசியாவின் முக்கிய பங்குச்சந்தைகளில் ஒன்றான ஷாங்காய் மற்றும் ஷென்ஜென் பங்குச்சந்தைகள் 5 சதவீத்திற்கு மேல் சரிந்ததால் தற்காலிகமாக சிறிது நேரம் வர்த்தகம் நிறுத்தி வைக்கப்பட்டன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 04,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 04,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 04,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 04,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!