பதிவு செய்த நாள்
06 ஜன2016
10:37
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக மந்தமாக உள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 77.38 புள்ளிகள் சரிந்து 25,502.96-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 21.30 புள்ளிகள் சரிந்து 7,763.30-ஆகவும் இருந்தன. வங்கிகள், உலோகம், எம்எம்சிஜி., உள்ளிட்ட முக்கிய நிறுவன பங்குகள் சரிவுடன் இருப்பதால் பங்குச்சந்தைகளில் சரிவு நிலை காணப்படுவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆசியாவின் இதர பங்குச்சந்தைகளான ஹாங்காங்கின் ஹேங்சேங் 0.95 சதவீதமும், ஜப்பானின் நிக்கி 1.62 சதவீதம் சரிந்து இருப்பதும் பங்குச்சந்தைகள் சரிவுக்கு காரணமாகியுள்ளன. முன்னதாக கடந்த இரண்டு நாட்களில் சென்செக்ஸ் 580 புள்ளிகள் சரிவை சந்தித்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|