பதிவு செய்த நாள்
07 ஜன2016
18:24
மும்பை : கடந்த 19 மாதங்களில் இல்லாத இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்து உள்ளன. சீனாவின் யுவான் மதிப்பு சரிந்தது, அதன்காரணமாக அந்நாட்டு பங்குச்சந்தைகளும் கடும் சரிவை சந்தித்தால் இந்தியாவின் பங்குச்சந்தைகளும் கடும் வீழ்ச்சி கண்டன. இந்தவாரத துவக்கத்தில் ஏற்கனவே சென்செக்ஸ் 550 புள்ளிகள் வீழச்சி கண்ட நிலையில் இன்று மீண்டும் அதேப்போன்று ஒரு வீழ்ச்சியை கண்டது.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 554.50 புள்ளிகள் சரிந்து 24,851.83-ஆக இருந்தது. இதன்மூலம் சென்செக்ஸ் 25 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சென்றது. கடந்த 19 மாதங்களில் இல்லாத அளவுக்கு இன்று வீழ்ச்சி கண்டது.
தேசிய பங்குச்சந்தையான நிப்டி 172.70 புள்ளிகள் சரிந்து 7,568.30-ஆக முடிந்ததுடன், நிப்டி 7,600 புள்ளிகளுக்கு சென்றது.
இன்றைய வர்த்தகத்தில் அநேக பங்குகள் விலை சரிவுடன் முடிந்தன. குறிப்பாக பெல் நிறுவன பங்குகள் 6.98 சதவீதமும், டாடா ஸ்டீல் 6.85 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் 6.15 சதவீதமும் சரிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|