பதிவு செய்த நாள்
14 ஜன2016
11:02
மும்பை : இரண்டு நாள் சரிவுக்கு பின்னர் இந்திய பங்குச்சந்தைகள் நேற்று தான் சற்று உயர்ந்த நிலையில் இன்று(ஜன.14ம் தேதி) மீண்டும் கடுமையாக சரிந்துள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 365.08-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 118.60 புள்ளிகள் சரிந்து 7,443.80-ஆகவும் இருந்தன.
உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவு காரணமாக ஆசிய உள்ளிட்ட இந்திய பங்குச்சந்தைகளும் சரிவை சந்தித்து உள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம் இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியாகியுள்ளதால் அது தொடர்பான பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்க தொடங்கியதால் பங்குச்சந்தைகள் சற்று மீண்டன. இருப்பினும் காலை 11 மணியளவில் சென்செக்ஸ் 150 புள்ளிகளும், நிப்டி 51 புள்ளிகளும் சரிந்து காணப்பட்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|