பதிவு செய்த நாள்
14 ஜன2016
19:17
மும்பை : இரண்டு நாள் சரிவுக்கு பின்னர் இந்திய பங்குச்சந்தைகள் நேற்று தான் சற்று உயர்ந்த நிலையில் இன்று(ஜன.14ம் தேதி) மீண்டும் சரிவை சந்தித்தன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 365.08-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 118.60 புள்ளிகள் சரிந்து 7,443.80-ஆகவும் இருந்தன.
உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவு காரணமாக ஆசிய உள்ளிட்ட இந்திய பங்குச்சந்தைகளும் சரிவை சந்தித்தன. இருப்பினும் இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு நிதி நிலை சிறப்பாக இருந்ததால் அது தொடர்பான பங்குகள் உயர்ந்தது தவிர முக்கிய நிறுவன பங்குகள் சற்று உயர்ந்தால் பங்குச்சந்தைகள் சற்று மீண்டன. இருப்பினும் வர்த்தகம் சரிவிலேயே முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் சென்செக்ஸ் 81.14 புள்ளிகள் சரிந்து 24,772.97-ஆகவும், நிப்டி 25.60 புள்ளிகள் சரிந்து 7,536.80-ஆகவும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|