பதிவு செய்த நாள்
20 ஜன2016
10:34
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று(ஜன.20ம் தேதி) கடும் சரிவை சந்தித்து இருக்கிறது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி, கடந்த, 25 ஆண்டுகளில் மிகக்குறைவாக, 2015ல், 6.9 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. இதனால், உலகளவில் பொருளாதார நிலை பற்றிய கவலை தொற்றிக் கொண்டுள்ளது. இதன் தாக்கம் ஆசிய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்தது. இதனால் இந்திய பங்குச்சந்தைகள் தடுமாறி போய் உள்ளது.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 349.51 புள்ளிகள் சரிந்து 24,130.33-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 98.65 புள்ளிகள் சரிந்து 7,336.45-ஆகவும் இருந்தது. காலை 10.20 மணியளவில் சென்செக்ஸ் 389 புள்ளிகளும், நிப்டி 116 புள்ளிகளும் சரிந்து இருந்தன.
இன்றைய வர்த்தகம் துவங்கும்போது சுமார் 870 நிறுவன பங்குகள் சரிந்தும், 126 நிறுவன பங்குகள் உயர்வுடனும், 41 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் துவங்கின.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|