பதிவு செய்த நாள்
21 ஜன2016
18:01
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிவை சந்தித்துள்ளன. இன்றைய வர்த்தகநேர முடிவில் சென்செக்ஸ் 24 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சென்றது.
கச்சா எண்ணெய் விலை சரிவு, சீனா பொருளாதாரம் சரிந்தது உள்ளிட்ட காரணங்களால் நேற்றைய வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. இருப்பினும் ஆசிய பங்குச்சந்தைகளில் இன்று காணப்பட்ட ஏற்றத்தால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் துவங்கின. ஆனால் இந்த ஏற்றம் சில மணிநேரங்கள் தான் நீடித்தது. முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததாலும், கச்சா எண்ணெய் விலை சரிவின் பாதிப்பு இன்று தொடர்ந்ததாலும், மதியத்திற்கு மேல் ஆசிய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தாலும் இன்றைய வர்த்தகம் இறுதியில் சரிவுடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 99.83 புள்ளிகள் சரிந்து சென்செக்ஸ் 24 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சென்று 23,962.21-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 32.50 புள்ளிகள் சரிந்து 7,276.80-ஆகவும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|