பதிவு செய்த நாள்
22 ஜன2016
12:28
ஊட்டி: ''தென் மாநில தேயிலைத் தூள் சராசரி விலை, வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது,'' என்று, தேயிலை வாரிய செயல் இயக்குனர் பால்ராசு தெரிவித்தார்.
ஊட்டி, தொட்டபெட்டாவில், இந்திய தேயிலை வாரிய மானியத்துடன் துவங்கப்பட்டுள்ள, 'கிரீன் டீ' தயாரிப்பு தொழிற்சாலையை திறந்து வைத்து, தென்மண்டல தேயிலை வாரிய செயல் இயக்குனர் பால்ராசு கூறியதாவது: தேயிலை தொழிலில், மூன்றாண்டுகளாக பின்னடைவு காணப்பட்டது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில், பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல், சிறு விவசாயிகள் சிரமப்பட்டனர். இந்நிலையில், தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில், கேரளாவில் நடந்த ஸ்டிரைக், உலகஅளவில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் என, பல காரணங்களால், உற்பத்தி குறைந்த நிலையில், தென் மாநில தேயிலை தூளுக்கு கிராக்கி அதிகரிக்க துவங்கியுள்ளது. வாரந்தோறும், குன்னூர், கோவை, கொச்சி ஏல மையங்களில் தேயிலை தூள் ஏலம் நடக்கிறது. நடப்பாண்டின், இரண்டாம் ஏலத்தில், தென் மாநில தேயிலை தூளின் சராசரி விலை, கிலோவுக்கு, 100.39 ரூபாயாக அதிகரித்துள்ளது; இது, வரலாறு காணாத விலையேற்றம்.
இதற்கு முன், 2013ல், சராசரி விலை கிலோ, 98 ரூபாய் வரை சென்றது. வரும் நாட்களிலும், தேயிலை வர்த்தகம் ஏறுமுகத்தில் செல்லும். உலக சந்தையில், கிரீன் டீ, ஒயிட் டீ, ஆர்தோடக்ஸ் டீக்கு வரவேற்பு உள்ளது. இத்தகைய தேயிலை தூள் உற்பத்தியை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|