பதிவு செய்த நாள்
22 ஜன2016
12:29
சேலம்: வடமாநிலங்களில் இருந்து, தமிழகத்துக்கு வரும் சர்க்கரை வரத்து குறைந்ததால், ஒரே மாதத்தில் சர்க்கரை விலை குவிண்டாலுக்கு, 500 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.தமிழகத்தின் பெரிய மார்க்கெட்களான சென்னை, விருதுநகர், சேலம் செவ்வாய்பேட்டை ஆகிய இடங்களுக்கு, உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து சர்க்கரை வருகிறது.
கடந்த மாதம் வரை, வாரத்துக்கு 750 லாரிகளில் வந்து கொண்டிருந்த சர்க்கரை, ஜனவரி முதல் வாரத்தில், 100 லாரிகளாக குறைந்தது. தற்போது, 50 லாரிகளாக குறைந்து விட்டது. தமிழகத்தில் தொடர்ந்து வந்த பண்டிகைகளால், சர்க்கரை விற்பனை அதிகரித்து, மார்க்கெட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதனால், ஜன., 12ம் தேதி, சர்க்கரை விலை, குவிண்டாலுக்கு, 250 ரூபாய் உயர்ந்து, குவிண்டால், 3,350 ரூபாயாக இருந்தது. நேற்று மீண்டும் குவிண்டாலுக்கு, 250 உயர்ந்து, 3,600 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|