பதிவு செய்த நாள்
01 பிப்2016
17:58
மும்பை : வாரத்தின் துவக்கநாளில் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கி, சரிவுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகம் துவங்கும் போது சென்செக்ஸ் 38 புள்ளிகளும், நிப்டி 25 புள்ளிகளும் உயர்வுடன் துவங்கின. முக்கிய நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டதால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் ஆரம்பமாகின. ஆனபோதும் ரிசர்வ் வங்கியின் நிதிநிலை ஆய்வுக்கூட்டம் நடைபெற இருப்பதால் அதன்மீதான எதிர்பார்ப்பால் வங்கி தொடர்பான பங்குகள் சரிந்தன. இதனால் இன்றைய வர்த்தகம் சரிவுடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 45.86 புள்ளிகள் சரிந்து 24,824.83-ஆகவும், நிப்டி 7.60 புள்ளிகள் சரிந்து 7,555.95-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் வங்கி தொடர்பான பங்குகள் சரிவை சந்தித்தன. குறிப்பாக ஐசிஐசிஐ., பங்குகள் 5.63 சதவீதமும், எஸ்பிஐ., பங்குகள் 3.92 சதவீதமும் சரிவை சந்தித்தன.
முன்னதாக வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் இன்று மீண்டும் 25 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|