பதிவு செய்த நாள்
15 பிப்2016
17:38
மும்பை : கடந்த வாரம் இந்திய பங்குச்சந்தைகள், கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்த நிலையில், வாரத்தின் முதல்நாளில் அதிக ஏற்றத்துடன் முடிந்தன.
ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட முன்னேற்றம் காரணமாகவும், முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்க தொடங்கியதாலும், இன்றைய வர்த்தகம் துவங்கும்போதே உயர்வுடன் துவங்கின. அந்த உயர்வு நாள் முழுக்க நீடித்தது. வங்கி தொடர்பான பங்குகள், எண்ணெய் நிறுவன பங்குகள் உள்ளிட்ட முக்கிய நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டதால் இன்றைய வர்த்தகம் நாள் முழுக்க எழுச்சியுடனேயே இருந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 568 புள்ளிகள் உயர்ந்து 23,554.12-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 182 புள்ளிகள் உயர்ந்து 7,162.95-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவனங்களில் 27 நிறுவன பங்குகள் உயர்வுடன் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|