பதிவு செய்த நாள்
16 பிப்2016
10:17
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் நேற்று அதிக ஏற்றத்துடன் முடிந்த நிலையில், அந்த ஏற்றம் இன்று வர்த்தகம் துவங்கும்போது இருந்தது. ஆனால் சற்று நேரத்திலேயே பங்குச்சந்தைகள் சரிய தொடங்கின.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 137 புள்ளிகள் உயர்ந்து 23,691.10-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 41.70 புள்ளிகள் உயர்ந்து 7,204.65-ஆகவும் இருந்தன. காலை 10 மணியளவில் சென்செக்ஸ் 58 புள்ளிகள் சரிந்து 23,495 புள்ளிகளிலும், நிப்டி 20 புள்ளிகள் சரிந்து 7,143 புள்ளிகளிலும் வர்த்தகமாகின.
நடப்பாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற இருப்பதால் அதன்மீதான எதிர்பார்ப்பாலும், முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்து வருவதாலும் பங்குச்சந்தைகளில் சரிவு காணப்படுகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|