பதிவு செய்த நாள்
16 பிப்2016
16:51
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் நேற்று அதிக ஏற்றத்துடன் முடிந்த நிலையில், அந்த ஏற்றம் இன்று நீடிக்கவில்லை, சென்செக்ஸ் 362 புள்ளிகளும், நிப்டி 114 புள்ளிகளும் சரிவுடன் முடிந்தன.
ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் காரணமாக இன்றைய வர்த்தகம் துவங்கும்போதே ஏற்றத்துடன் துவங்கின. ஆனால் சற்றுநேரம் தான் இந்த ஏற்றம் நீடித்தது. நேற்றைய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றத்தால், முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை அதிகளவில் விற்பனை செய்தனர். மேலும் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பாலும் பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 362.15 புள்ளிகள் சரிந்து 23,191.97-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 114.70 புள்ளிகள் சரிந்து 7,100 புள்ளிகளுக்கும் கீழ் சென்று 7,048.25-ஆக முடிந்தது.
இன்றைய வர்த்தகத்தில் 1993 நிறுவன பங்குகள் சரிந்தும், 623 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 109 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|