பதிவு செய்த நாள்
18 பிப்2016
04:50
மத்திய அரசின் திட்டமான, ‘ஸ்டார்ட் அப் இந்தியா; ஸ்டாண்ட் அப் இந்தியா’ குறித்த கருத்தரங்கம், வரும், 21ம் தேதி, கோவையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தை, ‘யங் இண்டியன்ஸ்’ கோவை கிளையும், இந்திய தொழில் வர்த்தக சபையும் – கோவை பிரிவு – இணைந்து நடத்துகின்றன. இளைய தலைமுறையினர் புத்திசாலிகள்; எதை, எப்படி செய்யலாம் என்று சிந்தித்து கொண்டேயிருப்பர். ஆனால், எப்படி துவங்குவது என்பதில் தான் பிரச்னை. இவற்றுக்கெல்லாம் தீர்வு இருக்கின்றன என்கிறார், கோவை ‘யங் இண்டியன்ஸ்’ தொழில் அமைப்பு தலைவர் சுவாதி ரோஹித். அவர் மேலும் கூறுகையில், ‘‘அரசின் பல திட்டங்களையும், உதவிகளையும் அறிந்து செயல்பட்டால், தொழில்கள் நிறைந்த சூழலை உருவாக்க முடியும்; இதற்கான முயற்சியில், ‘யங் இண்டியன்’ அமைப்பு களமிறங்கி உள்ளது,’’ என்றார்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|