பதிவு செய்த நாள்
18 பிப்2016
06:21
திருவனந்தபுரம் : ‘இந்தியாவில், தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்ப்பதில், கேரளா முன்னணி மாநிலமாக திகழ்கிறது’ என, ‘அசோசெம்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தின், பொருளாதார வளர்ச்சி பற்றிய ஆய்வை, ‘அசோசெம்’ மேற்கொண்டது. அதன் விவரம்: கடந்த, 2012 – 14ல், இந்தியாவில், 15 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதில், கேரள மாநிலத்தின் பங்கு, 1 சதவீதம் அதாவது, 17 ஆயிரத்து, 600 கோடி ரூபாய். எனினும், 2014 – 15ல், கேரளாவில், முதலீடு செய்ய விரும்புவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த காலகட்டத்தில், கேரளா இரண்டு லட்சம் கோடி ரூபாயை ஈர்த்துள்ளது. இதில், அதிகபட்சமாக, சேவை துறைக்கு, 54.5 சதவீதம் அளவிற்கு ஒப்பந்தங்கள் வந்துள்ளன. அதற்கு அடுத்தபடியாக, உற்பத்தி துறை, 27.5 சதவீதம்; ரியல் எஸ்டேட், கட்டுமானம், 8 சதவீதம்; மின்சாரம், 7.5 சதவீதம் என்றளவில் உள்ளது.
கேரளாவில், தொழில் முதலீட்டு ஒப்பந்தம் ஆண்டுதோறும், 10 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. இதில், ரியல் எஸ்டேட், கட்டுமானம், 44 சதவீதம்; சுரங்கம், 20 சதவீதம்; நீர் பாசனம், 18 சதவீதம்; உற்பத்தி, 15 சதவீதம்; சேவை, 13 சதவீதம்; மின்சாரம், 4 சதவீதம் என்றளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது.எனினும், 2014 – 15ம் ஆண்டில் ஒப்பந்தம் செய்த, 54 சதவீத நிறுவனங்கள், இதுவரை தொழில் துவங்கவில்லை. கேரளாவில், அடிப்படை கட்டமைப்பு, போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தினால், தொழில் உற்பத்தி மேலும் அதிகரிக்கும்.
இதன் மூலம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் உள்ள, 33 லட்சம் பேர் பயன் அடைவர். வேளாண், உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட தொழில்களில், ஏராளமானோருக்கு வேலை கிடைக்கும் என்கிறது அந்த ஆய்வறிக்கை.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|