பதிவு செய்த நாள்
22 பிப்2016
07:19
புதுடில்லி : தொலைதொடர்பு துறையின், கடன் தகுதி மதிப்பீட்டை, ‘நிலையானது’ என்ற பிரிவில் இருந்து, ‘நிலையற்றது’ என்ற பிரிவிற்கு, தர நிர்ணய நிறுவனமான, ‘இந்தியா ரேட்டிங்ஸ்’ மாற்றியுள்ளது. தொலைதொடர்பு துறையில் நிலவும் கடும் போட்டி, மொபைல்சேவை பயன்பாட்டில் தேக்க நிலை போன்றவற்றால், இத்துறை நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி, 2016 – 17ம் நிதியாண்டில் குறையும். இத்துடன், ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம், மொபைல்போன் சேவையில் இறங்குவதால் போட்டி இன்னும் கடுமையாக இருக்கும். அதனால், நிறுவனங்கள், அடிப்படை கட்டமைப்புகளுக்கு அதிகம் செலவழிக்க நேரிடும்; இவற்றையெல்லாம் ஆராய்ந்து, அவற்றின் கடன் தகுதி தரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என, இந்தியா ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|