பதிவு செய்த நாள்
22 பிப்2016
07:22
புதுடில்லி : விமானம், மருத்துவம் ஆகிய துறைகளில் இருந்து, மத்திய அரசு வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, துறைகளின் எண்ணிக்கையை குறைத்து, பொது மக்களுக்கு, சிறப்பான சேவை வழங்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது:மத்திய அரசு, விமானம், மருத்துவ துறைகளில் இருந்து வெளியேறும் திட்டத்திற்கான அறிக்கையை, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை வகுத்து வருகிறது. இந்த துறைகளை தனியார் மயமாக்கும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தீர்ப்பாயங்களின் எண்ணிக்கையை, 36ல் இருந்து, 17 ஆக குறைக்கவும், 685 அரசு தன்னாட்சி நிறுவனங்களின் எண்ணிக்கையை குறைக்கவும், மத்திய பணியாளர் துறை அறிக்கை தயாரித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|