பதிவு செய்த நாள்
22 பிப்2016
07:27
புதுடில்லி : ‘‘கச்சா எண்ணெய் விலை இன்னும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரைக்கும் தொடர்ந்து குறைந்தே இருக்கும்,’’ என, தொழிலதிபர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.உலகில், மிகப் பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை வைத்திருப்பவர் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி. இவர், கச்சா எண்ணெய் விலை சரிவு குறித்து, தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டி வருமாறு:சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரித்து உள்ளது. இதனால், கடந்த, 35 ஆண்டுகளில், முதல் முறையாக, இப்படி தொடர்ந்து விலை குறைந்து உள்ளது. இதனால், இந்தியா உட்பட, கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகள் பயன் அடைந்துள்ளன. அமெரிக்காவில் தற்போது விற்பனை அதிகமாக செய்யப்படுவதால் இந்நிலை ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் சப்ளையை விட தேவை இன்னும் அதிகமாகவே இருக்கிறது. அதனால் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டு விடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|