பதிவு செய்த நாள்
22 பிப்2016
07:28
புதுடில்லி : ஐந்து ஆண்டுகள் உள்நாட்டு விமான சேவை அனுபவமுடன், குறைந்தது, 20 விமான சேவையை மேற்கொள்ளும் நிறுவனங்கள், சர்வதேச விமான சேவையை மேற்கொள்ளலாம். இந்த விதிமுறையை நீக்க, விமான போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்கு, இந்திய விமான நிறுவனங்கள் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து, ரத்தன் டாடா, ‘டுவிட்டரில்’ வெளியிட்டுள்ள செய்தி:விமான சேவையில் ஈடுபட்டுள்ள பழைய நிறுவனங்கள், விதிமுறையை ரத்து செய்யக் கூடாது என, அரசை வலியுறுத்தியுள்ளன. பழைய மற்றும் புதிய விமான நிறுவனங்கள் இடையே பாரபட்சமான கொள்கைகளுக்காக வாதாடுவது, விமான நிறுவனங்களின், ஏகாதிபத்திய போக்கையும், போட்டிக்கு அவை அஞ்சுவதையும் காட்டுகிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.டாடா குழுமம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உடன் விஸ்டாரா விமான சேவை மற்றும் மலேஷியாவின் ஏர் ஏஷியா உடன் இணைந்து, ஏர் ஏஷியா இந்தியா விமான சேவையை நடத்தி வருகிறது. இந்த இரண்டு நிறுவனங்களும் துவங்கி இரு ஆண்டுகளே ஆவதால், 5 – 20 விமான விதிமுறையை நீக்குவது, அவற்றுக்கு சாதகமாக இருக்கும் என, பழைய விமான நிறுவனங்கள் அஞ்சுகின்றன. அதனால், விதிமுறையை நீக்க எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|