பதிவு செய்த நாள்
22 பிப்2016
07:29
புதுடில்லி : வலைதளம் வாயிலாக, பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும், ‘ஸ்நாப்டீல்’ நிறுவனம், புதிய வர்த்தக கொள்கையை பின்பற்ற திட்டமிட்டு உள்ளது.இது குறித்து, ஸ்நாப்டீல் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான குனால் பாஹல் கூறியதாவது:வலைதள நிறுவனங்களின் வெற்றியைக் கணக்கிட, விற்பனை மதிப்பு உள்ளிட்ட, பல அளவுகோல்கள் உள்ளன. விற்பனை மதிப்பின் வளர்ச்சியை இலக்காக வைத்து ஸ்நாப்டீல் செயல்பட்டு வருகிறது.இனி, வாடிக்கையாளரின் அன்றாட பரிவர்த்தனை சார்ந்த வளர்ச்சியையும் கணக்கில் கொள்ள முடிவு செய்துள்ளது. இதன்படி, ஸ்நாப்டீல் வலைதளத்திலும், அது கையகப்படுத்தியுள்ள, ‘பிரீசார்ஜ்’ போன்ற நிறுவனங்களின் வலைதளங்களிலும், வாடிக்கையாளர்களின் அன்றாட பரிவர்த்தனைகள் கணக்கில் கொள்ளப்படும். இதற்காக, வாடிக்கையாளர்களின் வலைதள செயல்பாடுகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தற்போது, ஸ்நாப்டீல் வலைதளத்தில், தினமும், ஒரு கோடி பேர், வர்த்தக பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். புதிய கொள்கையை கடைபிடிப்பதன் மூலம், இந்த எண்ணிக்கையை வரும், 2020ம் ஆண்டு, இரண்டு கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.
‘பேஸ்புக்’ காட்டிய வழி:‘பேஸ்புக்’ நிறுவனம், அதன் ‘இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப், மெசஞ்சர்’ ஆகிய துணை பிரிவுகள் மூலம் தன் வாடிக்கையாளர்களை ஒருங்கிணைத்துள்ளது. இந்த வழிமுறையைத் தான், ஸ்நாப்டீலும் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|