பதிவு செய்த நாள்
22 பிப்2016
09:54
வர்த்தக நிறுவனங்கள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொள் ளும் வகையிலான தகவலை, சர்வதேச ஆய்வு நிறுவனம் ஒன்றின் பணியாளர்கள் தொடர்பான ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
ஏஆன் ஹூவிட் எனும் அந்த நிறுவனம், 700 நிறுவனங்கள் மத்தியில் நடத்திய ஆய்வு, கடந்த சில ஆண்டுகளில் பணியில் இருக்கும் ஊழியர்கள் நிறுவனங்களில் இருந்து வெளியேறுவது குறைந்திருப்பதாக தெரிவிக்கிறது. கடந்த, 2009ம் ஆண்டுக்குப்பின், பணியில் இருந்து விலகும் ஊழியர்களின் எண்ணிக்கை, 16.3 சதவீதமாகக் குறைந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த அறிக்கையில், ஊழியர்கள் வேலையை விட்டு செல்வதற்கான, ஐந்து முக்கிய காரணங்களும் குறிப்பிடப்பட்டு உள்ளன.
எதிர்பார்க்கக் கூடியது போல, சம்பளம் தொடர்பான அதிருப்தி முதலிடம் வகித்தாலும், பல ஊழியர்கள் மேல்படிப்பு படிப்பதற்காக வேலையை விட்டு செல்வதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
நிறுவனத்தில் ஒரே பொறுப்பில் இருக்க நேரும் அலுப்பும் முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது.
வளர்ச்சி குறைவாக இருப்பதாக உண்டாகும் எண்ணத்தாலும், பலர் வேலையை விட்டு செல்கின்றனர். ஆனால், காரணம் எதுவாக இருந்தாலும் இந்த முடிவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து இருக்கிறது என்பதே விஷயம்!
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|