பதிவு செய்த நாள்
23 பிப்2016
00:46
புதுடில்லி : ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், சிஸ்டெமா ஷியாம் டெலிசர்வீசஸ் நிறுவனத்தை வாங்கும் திட்டத்திற்கு, இந்திய சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான, சி.சி.ஐ., ஒப்புதல் அளித்துள்ளது. சிஸ்டெமா ஷியாம் நிறுவனம், 2007 முதல் தொலை தொடர்பு சேவையை வழங்கி வருகிறது. இந்நிறுவனம், ‘எம்.டி.எஸ்.,’ பிராண்டின் கீழ், தற்போது உ.பி., தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட, எட்டு தொலைதொடர்பு வட்டங்களில், தொலை தொடர்பு வசதியை அளிக்கிறது. இந்நிறுவனத்தில், ரஷ்ய அரசு, ரஷ்ய தொழிலதிபர் விளாடிமிர் எவ்டுஷென்கோவ் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த, ஷியாம் குழுமம் முதலீடு செய்துள்ளன. எம்.டி.எஸ்., பிராண்டை கையகப்படுத்துவதால், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் பலம் அதிகரிக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|