பதிவு செய்த நாள்
23 பிப்2016
03:14
பீஜிங் : ‘சீன தொழில் துறையின், அளவிற்கதிகமான உற்பத்தித்திறன், உள்நாட்டில் மட்டுமின்றி, உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கிறது’ என, ஐரோப்பிய வர்த்தக அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.அதில் மேலும் உள்ள விவரம்:சீன அரசின் சலுகைகளால், ஏராளமான புதிய தொழிற்சாலைகள் உருவாகி, பொருட்கள் அபரிமிதமாக உற்பத்தியாகின்றன. அதனால், ஏற்றுமதி செய்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம், சர்வதேச மந்தநிலையால், ஏற்றுமதியை மேலும் அதிகரிக்க முடியாமல், உள்நாட்டில் பொருட்கள் தேக்கமடைந்து உள்ளன. இதனால், உருக்கு சிமென்ட் உள்ளிட்ட தொழில்களின் விரிவாக்கத்திற்கு, சீனா தடை விதித்துள்ளது. உற்பத்தித் திறனை கட்டுப்படுத்த தவறினால், எதிர்காலத்தில், சீன பொருளாதாரம் எழுச்சி காணாது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|