பதிவு செய்த நாள்
23 பிப்2016
03:22
மும்பை : தேசிய பங்குச் சந்தையைத் தொடர்ந்து, பி.எஸ்.இ., எனப்படும், மும்பை பங்குச் சந்தையும், ஒரு நபர் நிறுவனம், பங்கு தரகராக செயல்பட அனுமதி அளித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2013ம் ஆண்டு கம்பெனிகள் சட்டத்தின் கீழ், ஒரு நபர் நிறுவனம், குறிப்பிட்ட நிபந்தனைப்படி, பங்கு புரோக்கராகவும், துணை புரோக்கராகவும் செயல்படலாம்; ஆனால், அவர், தன் கணக்கில், பங்கு வர்த்தகம் மேற்கொள்ள அனுமதியில்லை’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாண்டுகளுக்கு முன், தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் நோக்கில், ஒரு நபர் நிறுவன விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த நடைமுறை உள்ளது. கடந்த ஜனவரி நிலவரப்படி, இந்தியாவில்,பதிவு செய்யப்பட்ட, 5,402, ஒரு நபர் நிறுவனங்கள் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|