பதிவு செய்த நாள்
23 பிப்2016
03:24
புதுடில்லி : ‘‘மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால், வரும் ஆண்டுகளில், சிமென்ட் துறையின் மந்தநிலை மாறும்,’’ என, மத்திய நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்து உள்ளார்.டில்லியில், சிமென்ட் உற்பத்தியாளர் சங்கத்தின் ஆண்டு விழாவில், அவர் மேலும் பேசியதாவது: இந்திய சிமென்ட் துறையின் உற்பத்தித்திறன், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை, இரு மடங்கு அதிகரிக்கிறது. உலக சிமென்ட் உற்பத்தியில், இந்தியாவின் பங்களிப்பு, ஏழு சதவீதமாக உள்ளது. தனிநபர் சிமென்ட் பயன்பாடு, 202 கிலோவாக உள்ளது. இது, உலக சராசரியான, 543 கிலேவை விட குறைவாகும். இருந்தபோதிலும், இந்தியாவில் சிமென்ட் துறைக்கு, வளமான எதிர்காலம் காத்திருக்கிறது. ஏனெனில், மத்திய அரசு, ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தின் கீழ், 2022க்குள், ஐந்து கோடி வீடுகளை கட்ட திட்டமிட்டு உள்ளது. இத்துடன், 100 ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம், ‘அம்ருத்’ நகர் திட்டம் போன்றவற்றின் பணிகளும் துவங்கியுள்ளன. அதையொட்டி, துறைமுகங்கள், சாலைகள், மேம்பாலங்கள் என, அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்படும். அதனால், சிமென்டிற்கான தேவை அதிகரிக்கும். எனவே, வரும் ஆண்டுகளில், சிமென்ட் துறைக்கு சிறப்பான வளர்ச்சி காத்திருக்கிறது.அதேசமயம், சிமென்ட் விலை, திடீரென ஏறுவதும், இறங்குவதும் புரியாத புதிராக உள்ளது. இதை தடுக்க, சிமென்ட் துறை முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மூலப்பொருட்கள் செலவு அதிகரித்துள்ளதால், சிமென்ட் மீதான பலமுனை வரிகளை, மத்திய அரசு குறைக்க வேண்டும்-ஷைலேந்திர சவுக்சி, இந்திய சிமென்ட் தயாரிப்பாளர்,சங்கத்தின் புதிய தலைவர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|