பதிவு செய்த நாள்
23 பிப்2016
17:27
மும்பை : கடந்த நான்கு நாட்கள் உயர்வுடன் இருந்த இந்திய பங்குச்சந்தைகள் 5ம் நாளில் சரிவுடன் முடிந்தன. முதலீட்டாளர்கள் லாப நோக்கத்தோடு பங்குகளை விற்பனை செய்ததாலும், ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவாலும் இன்றைய வர்த்தகம் சரிவுடனயே துவங்கியது. தொடர்ந்து நாள் முழுக்க சரிவுடன் இருந்த பங்குச்சந்தைகள் வர்த்தகம் முடியும் சமயத்தில் அதிக சரிவுடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 378.61 புள்ளிகள் சரிந்து 23,410.18-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 125 புள்ளிகள் சரிந்து 7,109.55-ஆகவும் முடிந்தன. முன்னதாக கடந்த நான்கு நாட்களில் சென்செக்ஸ் 597 புள்ளிகள் உயர்வுடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 28 நிறுவன பங்குகள் சரிந்தும், 2 நிறுவன பங்குகள் உயர்வுடனும் முடிந்தன. குறிப்பாக பொதுத்துறை நிறுவன பங்குகள் 2.32 சதவீதமும், எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான பங்குகள் 1.87 சதவீதமும், உலோகம் தொடர்பான பங்குகள் 1.75 சதவீதமும் சரிந்தன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|