பதிவு செய்த நாள்
24 பிப்2016
00:46
புதுடில்லி : ‘‘பழைய வாகனங்களை வாங்குவோர், எச்சரிக்கையாக இருக்க, ‘மொபைல் ஆப்’ உருவாக்கப்பட்டு வருகிறது,’’ என, மத்திய சாலை போக்குவரத்து துறை இணை செயலர் அபே டாம்ளே கூறினார்.
டில்லியில், சாலை பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. இதில், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி பேசியதாவது: பேருந்துகளின் எரிபொருள் செலவைக் குறைக்க, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசின், ‘இஸ்ரோ’ பேருந்துகளுக்காக உருவாக்கியுள்ள, ‘பேட்டரி’யால் இயங்க கூடிய, எலக்ட்ரிக் பேருந்தும் அறிமுகம் செய்யப்படும். இதனால், பேருந்து கட்டணம், 50 சதவீதம் குறையும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில், மத்திய சாலை போக்குவரத்து துறை இணை செயலர் அபே டாம்ளே கூறியதாவது: பழைய மற்றும் பயன்படுத்திய வாகனங்களை வாங்கும்போது, அந்த வாகனம் சட்ட சிக்கலில் சிக்கியுள்ளதா என்பதையும், வாகனத்தின் உரிமையாளரின் உண்மை தன்மையை கண்டறியவும், ‘மொபைல் ஆப்’ உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், குற்றப் பின்னணி இல்லாத டிரைவர்களை பணியில் அமர்த்தவும் வழிவகை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|