பதிவு செய்த நாள்
24 பிப்2016
00:47
சான்பிரான்சிஸ்கோ : சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக், 5ஜி அகண்ட அலைவரிசை சேவையை வழங்குவதற்கு ஏற்ற வகையில், மின்னல் வேக தகவல் பரிமாற்றத்திற்கான வசதிகளுடன் மொபைல் போன்களை உருவாக்குவதற்காக, மொபைல் போன் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்க உள்ளது.
ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா நகரில், சர்வதேச மொபைல் போன் மாநாடு நடைபெறுகிறது. இதில், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க் பங்கேற்று, தன் நிறுவனத்துடன் இணைந்து, அதிவேக தகவல் பரிவர்த்தனைக்கான மொபைல் போன்களை உருவாக்க, தயாரிப்பு நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுப்பார் என, பேஸ்புக் தரப்பு தெரிவித்துள்ளது. பேஸ்புக் நிறுவனம், நேரடி வீடியோ படங்களை மின்னல் வேகத்தில் அனுப்ப திட்டமிட்டுள்ளது. அதற்கேற்ற தொழில்நுட்பத்துடன், மொபைல் போன்கள் தயாரிக்கப்பட்டால், தகவல் சேமிப்புக்கான ‘சர்வர்’ மற்றும் அது தொடர்பான சாதனங்களுக்கு செலவிடும் தொகையை, கணிசமாக மிச்சப்படுத்தலாம் என, மார்க் ஸுக்கர்பெர்க் எதிர்பார்க்கிறார். அதன் காரணமாகவே, அவர், மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட விரும்புகிறார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|