பதிவு செய்த நாள்
24 பிப்2016
00:48
புதுடில்லி : நிறுவனங்களின் கணக்குகளை தணிக்கை செய்யும், ‘ஆடிட்டர்’ சந்தையில், இந்த ஆண்டு, மிகப் பெரிய மாற்றம் நிகழ உள்ளது. ஏராளமான நிறுவனங்கள், பல காலமாக வைத்துள்ள ஆடிட்டர்களை மாற்றப் போகின்றன. இதற்கு புதிய, கம்பெனிகள் சட்டம் தான் காரணம்.
அனுமதி இல்லை : இந்த சட்டப்படி, 20 கோடி ரூபாய்க்கு அதிகமாக பங்கு மூலதனம் மேற்கொண்டுள்ள நிறுவனங்கள், 10 ஆண்டுகளுக்கு மேல், ஒரே ஆடிட்டரை வைத்திருக்க அனுமதிஇல்லை. இந்த நடைமுறை, 2014, ஏப்ரல், 1 முதல் நடைமுறைக்கு வந்து விட்டது. எனினும், உடனடியாக, ஆடிட்டரையோ அல்லது ஆடிட் நிறுவனத்தையோ மாற்ற முடியாது என்பதால், நிறுவனங்களுக்கு மூன்று ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டது. அதற்குள், நிறுவனங்கள் ஆடிட்டரை மாற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டன. அதன்படி, 10 ஆண்டுகளுக்கு மேல், ஒரே ஆடிட்டரை வைத்துள்ள நிறுவனங்கள், 2017, ஏப்ரல், 1 முதல், புதிய ஆடிட்டரை நியமிக்க வேண்டும். இந்த அவகாசத்தை, 2018ம் ஆண்டு வரை நீட்டிக்க வேண்டும் என, நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன.
பெரிய மாற்றம் : இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து, 2017, ஏப்ரல் முதல், புதிய ஆடிட்டரை நியமிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், புதிய ஆடிட்டர்களுக்கான தேவை அதிகரிக்கும். அதுபோலவே, ஆடிட் நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் மாறுவர். இது, இந்திய ஆடிட்டர் சந்தையில், மிகப் பெரிய மாற்றத்தையும், வேலைவாய்ப்பையும் உருவாக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|