பதிவு செய்த நாள்
24 பிப்2016
00:51
புதுடில்லி : மிகப் பிரபலமான ‘காட்பரீஸ்’ சாக்லேட்டை தயாரிக்கும் நிறுவனமான மான்டிலெஸ் நிறுவனம், 580 கோடி ரூபாய், கலால் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
சாக்லேட் தயாரிப்பில் உலகெங்கும் கொடிகட்டி பறக்கும் நிறுவனம் மான்டிலெஸ் இண்டர்நேஷனல். இந்தியாவில், இமாச்சல பிரதேசத்தில் உள்ள தன் தொழிற்சாலையில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு, லஞ்சம் கொடுத்து, முறைகேடாக வரி விலக்கு பெற்று, 580 கோடி ரூபாய் அளவுக்கு கலால் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் மீது புகார் எழுந்தது. இதுகுறித்து, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம், விசாரணையை துவங்கியுள்ளது.
அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பு?இந்த முறைகேட்டில், மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு உள்ள தொடர்பு குறித்த விசாரணையும் நடந்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பான கோப்புகளை தருமாறு, காட்பரீஸ் நிறுவனத்தைக் கேட்டுள்ளது, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம். ‘மான்டிலெஸ் இந்தியா’ என்ற பெயரில் இந்தியாவில் தற்போது செயல்படும் இந்நிறுவனம், ‘விதிமுறைகளை தாங்கள் முறையாகப் பின்பற்றுவதாகவும், நியாயமான விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாகவும்’ கூறி உள்ளது.
வால்மார்ட்டை தொடர்ந்து...வரி ஏய்ப்பு, லஞ்ச முறைகேடு புகார் தொடர்பாக, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் விசாரணையில் சிக்கியுள்ள இரண்டாவது வெளிநாட்டு நிறுவனம் காட்பரீஸ் ஆகும். சில்லரை விற்பனையில் புகழ் பெற்ற வால்மார்ட் நிறுவனமும், இந்தியாவில் கடைகளை திறக்க, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, சுங்கத்துறை அனுமதி பெற்றதாக புகார் எழுந்தது. இதை, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் விசாரித்து வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|