பதிவு செய்த நாள்
25 பிப்2016
03:38
புதுடில்லி : சென்னையைச் சேர்ந்த, ராயல் என்பீல்டு நிறுவனம், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், மோட்டார் சைக்கிள் விற்பனை கூடத்தை திறந்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் சர்வதேச பிரிவு தலைவர் அருண் கோபால் கூறியதாவது: நிறுவனம், முதன் முதலாக, தாய்லாந்தில், உலகப் புகழ் பெற்ற, ‘புல்லட்’ உள்ளிட்ட மோட்டார் சைக்கிள்களின் விற்பனைக்காக, பிரத்யேக நிலையத்தை திறந்துள்ளது.இங்கு, நிறுவனத்தின், 250 – 750 சி.சி., மோட்டார் சைக்கிள்களுக்கு சிறப்பான வர்த்தக வாய்ப்பு உள்ளது. இதையடுத்து, தாய்லாந்தின் பிற நகரங்களிலும் இதுபோன்ற விற்பனை கூடத்தை திறக்க திட்டமிட்டுள்ளோம். சமீபத்தில், இந்தோனேஷியாவில், நடுத்தர மோட்டார் சைக்கிள்களை அறிமுகப்படுத்தினோம். மேலும், லண்டன், துபாய், மேட்ரிட், பாரிஸ், உள்ளிட்ட நகரங்களிலும், வர்த்தகத்தை விரிவுபடுத்திஉள்ளோம். நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் விற்பனை, சென்ற ஜனவரி வரையிலான, 10 மாதங்களில், 65 சதவீதம் உயர்ந்து, 47,710 ஆக உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 28,927 ஆக இருந்தது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|