பதிவு செய்த நாள்
25 பிப்2016
03:41
புதுடில்லி : வசதி இருந்தும் கடனை திரும்ப தராதோர் பட்டியலை, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பாங்க் ஆப் இந்தியா ஆகியவை வெளியிட்டு உள்ளன.
இதில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, 2015 செப்டம்பர் நிலவரப்படி, வசதி படைத்த, 1,164 நிறுவனங்களிடம் இருந்து, 11,705 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டிஉள்ளதாக தெரிவித்து உள்ளது. இவ்வங்கி, 1,600 கோடி ரூபாய் பாக்கிக்காக, ‘கிங்பிஷர் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தை, ஏற்கனவே இந்த பட்டியலில் சேர்த்துள்ளது. மேலும், 13.10 கோடி ரூபாய் கடனை திரும்ப செலுத்தாத, வசதி படைத்த, 13 நிறுவனங்கள் மீது, இவ்வங்கி வழக்கு தொடுத்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் பாங்க் : இவ்வங்கி, 2015 டிசம்பர் நிலவரப்படி, வசதி இருந்தும், 10,869 கோடி ரூபாய் கடனை திரும்பத்தராத, 904 நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது.அதில் நான்கு நிறுவனங்களிடமிருந்து மட்டும், 2,000 கோடி ரூபாய் வசூலாக வேண்டியுள்ளது. அதிகபட்சமாக, ‘வின்சம் டையமண்ட்ஸ் அண்டு ஜூவல்லரி நிறுவனம், 900 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளது.
அடுத்து, ‘பிரிசிஷியஸ் ஜுவல்லரி அண்டு டையமண்ட்ஸ்’ – 748 கோடி ரூபாய்; ‘ஜும் டெவலப்பர்ஸ்’ – 410 கோடி ரூபாய்; ‘நாபெட்’ – 224 கோடி ரூபாய், ‘எஸ் குமார் நேஷன்வைடு’ – 147 கோடி ரூபாய் என்ற அளவில் பாக்கி வைத்துள்ளன. இவ்வங்கியும், சமீபத்தில், கிங் பிஷர்ஸ் ஏர்லைன்ஸ், அதன் நிறுவனர் விஜய் மல்லையா ஆகியோரை, வசதி இருந்தும் கடனை திரும்ப தராதோர் பட்டியலில் சேர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|