பதிவு செய்த நாள்
25 பிப்2016
14:22
புதுடில்லி : புதிய ரயில்கள் எதுவும் இன்றி, கட்டண உயர்வு இன்றி ஏற்கனவே இருக்கும் ரயில்வே திட்டங்களையும், அதை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் அறிவிப்பாக, குறிப்பாக நவீன மையத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பட்ஜெட்டாக 2016-17ம் ஆண்டின் மத்திய ரயில்வே பட்ஜெட் அமைந்துள்ளது.
பார்லிமென்ட்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியுள்ள நிலையில், 2016-17ம் ஆண்டுக்கான மத்திய ரயில்வே பட்ஜெட்டை, மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது...
அரசு மற்றும் தனியார் கூட்டு முயற்சி மூலம் முதலீடுகள் திரட்டப்பட்டு ரயில்வே மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும். 2020ம் ஆண்டிற்குள் ஆளில்லா லெவல் கிராசிங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படும். வரும் நிதியாண்டில் ரயில் வருவாயை 1 லட்சத்து 84 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரயில் கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் வருவாயை அதிகரிப்பதே தற்போதைய நடைமுறையாக உள்ளது. இந்த முறை மாற்றப்பட வேண்டும். பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும் ரயில்வேயின் வளர்ச்சிக்காக செலவிடப்படும். ரயில்வே வருவாய் குறைந்து வருவது சுமையாக உள்ளது. வரும் நிதியாண்டில் 2800 கி.மீ., அகல ரயில் பாதைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டை விட வரும் நிதியாண்டில் கூடுதலாக 10 சதவீதம் வருவாய் ஈட்டப்படும். மானியங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
முதலீடு மற்றும் வருவாய் : ரயில்வே பட்ஜெட் மதிப்பீடு ரூ.1.21 லட்சம் கோடி. அடுத்த 5 ஆண்டில் ரூ.1.5 லட்சம் கோடி ரயில்வே துறையில் முதலீடு செய்ய எல்.ஐ.சி., ஒப்புக் கொண்டுள்ளது, மேலும் வருவாய் இலக்கு ரூ.1.84 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
புதிய திட்டங்கள்* 5300 கி.மீ தொலைவிற்கு 44 புதிய ரயில் திட்டங்கள்* 2000 கி.மீ ரயில்வே வழிதடங்கள் மின்மயமாக்கப்படும்.
ரயில்வே பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் வருமாறு....
* ரயில்வே கட்டணம் உயர்வு இல்லை* ரயில்வே துறையை நவீன மையமாக்க அடுத்த ஐந்தாண்டுகளில் ரூ.8.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு* மூத்த குடிமக்கள் மற்றும் பெண்களுக்கு லோயர்பெர்த் இடஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்த்தப்படும்.* அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ளது.* ஆன்லைன் மூலம் நிமிடத்திற்கு 7200 டிக்கெட்டுகள் வழங்கும்படி ரயில்வே இணையதளம் மேம்படுத்த திட்டம்.* முக்கியமான, கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் டபுள் டக்கர் ரயில் இயக்கப்படும்.* குழந்தைகளுடன் பயணிக்கும் தாய்மார்களின் வசதிக்காக பால் பொருட்கள் விற்பனை மற்றும் குழந்தைகளுக்கான உணவுப்பொருட்கள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்படும்.* வெளிநாடுகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்ய வசதி.* பெண்கள் பயணிக்கும் ரயில் பெட்டிகளில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்படும்.* இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் ஆட்டோ ஹப் உருவாக்கப்படும்.* பயணிகள் குறை கேட்க புதிதாக 2 மொபைல் ஆப்ஸ் உருவாக்கப்படும்.* ரயில் பெட்டிகளில் ஜிபிஎஸ்., வசதி மூலம் அடுத்து வரக்கூடிய ரயில்வே நிலையங்களை அறியும் வசதி.* 400 ரயில்நிலையங்களில் வை-பை வசதி* 450 ரயில் நிலையங்களில் 17 ஆயிரம் பையோ டாய்லட்* ரயில் டிக்கெட்டுகளில் பார்-கோடு வசதி* போன் மூலமாக ரயில்வே டிக்கெட்டை ரத்து செய்யும் வசதி.* பயணிகள் காப்பீடு தொடர்பாக காப்பீட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. * சுமை தூக்குவோர் இனி கூலி என்று அழைக்கப்பட மாட்டார்கள், அவர்கள் இனி சகாயாக்கள் என்று அழைக்கப்படுவர். * எஸ்எம்எஸ் அனுப்பினால் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் வசதி.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|