பதிவு செய்த நாள்
25 பிப்2016
16:18
மும்பை : இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய ரயில்வே பட்ஜெட்டில் நம்பிக்கை தரும் அளவிற்கு புதிய அறிவிப்புக்கள் ஏதும் வெளியாகாததால் இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிவடைந்துள்ளன. முக்கிய நிறுவனங்களின் பங்குகள் பெரிய அளவில் சரிவடைந்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. தேசிய பங்குச் சந்தையான நிப்டி 7000 புள்ளிகளுக்கும் கீழ் சரிவடைந்துள்ளது.
இன்றைய வர்த்தக நேர இறுதியில் சென்செக்ஸ் 113 புள்ளிகள் சரிந்து 22,976 புள்ளிகளாகவும், நிப்டி 48 புள்ளிகள் சரிந்து 6971 புள்ளிகளாகவும் இருந்தன. ஏசிசி, அல்ட்ரா டெக் சிமெண்ட், அம்புஜா சிமெண்ட் உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவடைந்துள்ளன. 100 ரயில் நிலையங்களில் இந்த ஆண்டுக்குள்ளும், 400 ரயில் நிலையங்களில் அடுத்த 2 ஆண்டுகளிலும் வை-பை வசதி செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதால் டி-லிங்க் இந்தியா நிறுவனத்தின் பங்குகளும், சிசிடிவி காமிராக்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பால் ஜிகோம் எலக்ட்ரானிக் செக்ய;ரிட்டி சிஸ்டம் ஆகிய நிறுவன பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.
ஆசிய சந்தையில் ஹாங்காங் மற்றும் ஷாங்காங் பங்குச்சந்தைகளும் கடும் சரிவையே சந்தித்தன. வங்கிகளின் முதலீடுகள் கூடியதால் ஐரோப்பிய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் காணப்பட்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|