பதிவு செய்த நாள்
26 பிப்2016
04:33
புதுடில்லி : ‘‘புதிய வாகனம் வாங்கும் போது, தங்களது பழைய வாகனத்தை உடைத்துவிடுவதற்காக, அதாவது ஸ்கிராப்புக்காக கொடுத்தால், அவர்களுக்கு வரிச்சலுகை அளிக்க வேண்டும் என கேட்டு, மத்திய நிதியமைச்சகத்திற்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது,’’ என, மத்திய சாலை போக்குவரத்து துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். காற்று மாசு அதிகரித்து வருவதை தடுக்க, பழைய வாகனங்களுக்கு தடை விதிக்க, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது. புதிய வாகனம் வாங்கும் போது, உரிய சான்றிதழை உரிமையாளர் அளித்தால், அதற்கேற்ப, கலால் வரியில் சலுகை வழங்கப்படும். இதன் மூலம், புதிய வாகனங்களுக்கான சந்தையில் ஏற்றம் வரும் என, அத்துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|