பதிவு செய்த நாள்
26 பிப்2016
04:34
மும்பை : தமிழகத்தில், ஈரோடு மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் செயல்பட்டு வரும், பொன்னி சுகர்ஸ் நிறுவனத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், 49 சதவீதம் பங்கு முதலீடு மேற்கொள்ள, ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.அதேசமயம், அந்த, 49 சதவீத வரம்பிற்குள், என்.ஆர்.ஐ., எனப்படும், வெளிநாடு வாழ் இந்தியர்களின் மொத்த பங்கு முதலீடு, 24 சதவீதத்தை தாண்டக் கூடாது என்றும், ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அன்னிய நிதி நிறுவனங்களுக்கு, பங்குகளை விற்பனை செய்ய, பொன்னி சுகர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக குழுவும், பங்குதாரர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர். இந்நிறுவனத்தில், 2015 டிசம்பர் நிலவரப்படி, நிறுவனர்கள், 42.36 சதவீதமும், முதலீட்டாளர்கள், 57.64 சதவீதமும் பங்கு மூலதனம் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|