‘ஜான்சன் அண்ட் ஜான்­ச­ன்’ 500 கோடி இழப்பீடு தர உத்­த­ரவு ‘ஜான்சன் அண்ட் ஜான்­ச­ன்’ 500 கோடி இழப்பீடு தர உத்­த­ரவு ... தொடர்ந்து இரண்­டு மாத­ம் வளர்ச்சி பாதையில் இந்­திய நிறு­வ­னங்கள் தொடர்ந்து இரண்­டு மாத­ம் வளர்ச்சி பாதையில் இந்­திய நிறு­வ­னங்கள் ...
உற்­பத்தி வரியை குறைக்க ஜவுளித்துறை கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 பிப்
2016
04:42

புது­டில்லி : ‘‘மத்­திய பட்­ஜெட்டில், செயற்கை நுாலி­ழைக்­கான உற்­பத்தி வரியை, பாதி­யாகக் குறைக்க வேண்டும்,’’ என, இந்­திய ஜவுளி தொழில் கூட்­ட­மைப்பின் செக­ரட்­டரி ஜெனரல் பினய் ஜாப் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.
அவர் மேலும் கூறி­ய­தா­வது: வேலை­வாய்ப்பில், விவ­சா­யத்தை அடுத்து, ஜவு­ளித்­துறை உள்­ளது. இது, தொழில் துறை உற்­பத்­தியில், 14 சத­வீ­தமும், மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியில்,4 சத­வீத பங்­க­ளிப்­பையும் கொண்­டுள்­ளது. திற­னற்ற சாதா­ரண தொழி­லா­ளர்கள், பெண்கள், கிரா­மப்­புற மக்கள் ஆகி­யோ­ருக்கு, வேலை­வாய்ப்பை வழங்­கு­கி­றது. ஆகவே, மத்­திய அரசு, ஜவு­ளித்­து­றைக்கு கூடு­த­லான சந்தை வாய்ப்பை ஏற்­ப­டுத்தி தர வேண்டும். அதற்கு, ஆடை தயா­ரிப்­பிற்கு அவ­சி­ய­மான, செயற்கை நுாலி­ழைக்கு விதிக்­கப்­பட்­டுள்ள, 12 சத­வீத உற்­பத்தி வரியை, 6 சத­வீ­த­மாக குறைக்க வேண்டும். இதன் மூலம், நெச­வா­ளர்­களின் ஜவுளி உற்­பத்தி செலவு குறையும்.
செயற்கை நுாலிழை விலை அதி­க­மாக உள்­ளதால் தான், இந்­தி­யாவில் அதன் பயன்­பாடு குறை­வாக உள்­ளது. உற்­பத்தி வரி உயர்வால், செயற்கை நுாலி­ழையில் தயா­ராகும் ஆடைகள் விலை அதி­க­மாக உள்­ளது. உற்­பத்தி வரியை குறைத்தால், ஜவுளி விற்­பனை பெருகும்.
அமெ­ரிக்கா மற்றும் ஐரோப்­பிய கூட்­ட­மைப்­புடன், தாராள வர்த்­தக ஒப்­பந்தம் கையெ­ழுத்­தானால், இந்­திய ஜவுளி ஏற்­று­மதி மேலும் உயரும். தொழி­லாளர் சட்­டத்­திலும் குறிப்­பி­டத்­தக்க மாற்றம் செய்தால், வேலை வாய்ப்பு பெருகும்.மத்­திய அரசு, இவற்றை கருத்தில் கொண்டு, ஜவுளி துறை வளர்ச்­சிக்­கான திட்­டங்­களை, மத்­திய பட்­ஜெட்டில் அறி­விக்க வேண்டும்.
செயற்கை நுாலிழை :பருத்தி, பட்டு, கம்­பளி போன்­றவை இயற்கை நுாலி­ழைகள். பாலிமர், நைலான் போன்ற, பெட்­ரோ­லிய உப பொருட்கள் மூலம், செயற்கை நுாலி­ழைகள் தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றன. இந்­தி­யாவில், பருத்தி, 65 சத­வீதம்; செயற்கை நுாலிழை, 35 சத­வீதம் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­ன்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)