பதிவு செய்த நாள்
27 பிப்2016
04:29
புதுடில்லி:மிகக் குறைந்த விலையில், மொபைல் போன் விற்கப் போவதாக அறிவித்த, ‘ரிங்கிங் பெல்’ நிறுவனம் மீது, மோசடி புகாரை எழுப்பி உள்ளது தனியார் பி.பி.ஓ., நிறுவனம் ஒன்று. ‘ரிங்கிங் பெல்’ நிறுவனம்,
‘பிரீடம் 251’ என்ற பெயரில் வெறும், 251 ரூபாய்க்கு, ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்து, சிக்கலில் சிக்கிக்கொண்டது அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில், ‘ரிங்கிங் பெல்’ நிறுவனம் மீது, ‘சைபியூச்சர்’ என்ற பி.பி.ஓ., நிறுவனம், மோசடி புகாரை எழுப்பியுள்ளது.
இதுகுறித்து, அந்நிறுவனத்தின் தலைமை செயலர் அதிகாரி அனுஜ் பைராதி கூறுகையில், ‘‘ரிங்கிங் பெல்’ நிறுவனம், வாடிக்கையாளர் அழைப்புகளை ஏற்கும் பணிக்கு வாராந்திர அடிப்படையில் பணம் பெற்றுக் கொண்டு, சேவை வழங்க ஒப்புக்கொண்டோம். ஆனால், எங்களுக்கு பணம் தராமல், ‘ரிங்கிங் பெல்’ இழுத்தடிக்கிறது. இது சம்பந்தமாக, போலீசில் புகார் அளிக்க உள்ளோம்,’’ என்றார். இதை, ‘ரிங்கிங் பெல்’ நிறுவனம் மறுத்துள்ளது.
இதுகுறித்து, அந்நிறுவன தலைவர் அசோக் சத்தா கூறியதாவது:ஒரு மணி நேரத்திற்கு, 12 லட்சம் அழைப்புகள் வருவதாக கூறினர். ஆனால், அத்தனை அழைப்புகளையும் அவர்களால் ஏற்க முடியவில்லை. வாடிக்கையாளரை தட்டிக் கழிப்பதாக புகார் வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
எப்படி முடியும்?:ரிங்கிங் பெல் நிறுவனத்தின், பிரீடம் ஸ்மார்ட்போன் அறிமுக விழாவில், பா.ஜ., தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். அதனால், மோசடியில் பா.ஜ.,வுக்கும் பங்கு உள்ளது. ரிங்கிங் பெல் நிறுவனத்தின் இயக்குனரே, ஸ்மார்ட்போன் விலை, குறைந்தபட்சம், 1,400 ரூபாய் என கூறும்போது, அதை எப்படி, 251 ரூபாய்க்கு விற்க முடியும். எனவே, இதுகுறித்து, மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
பிரமோத் திவாரி காங்., – எம்.பி.,
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|