‘ரிங்கிங் பெல்’ நிறுவனம் மீது மோசடி புகார்‘ரிங்கிங் பெல்’ நிறுவனம் மீது மோசடி புகார் ... தங்கம் விலை காலைநிலவரப்படி ரூ.104 குறைவு தங்கம் விலை காலைநிலவரப்படி ரூ.104 குறைவு ...
துரத்திய குற்றச்சாட்டுகள் ரூ.515 கோடியை பெற்று வெளியேறினார் விஜய் மல்லையா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2016
04:32

புதுடில்லி:ஓராண்டு இழுபறிக்குப் பின், மது விற்பனையில் ஈடுபட்டு வரும், ‘யுனைடெட் ஸ்பிரிட்ஸ்’ நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து, விஜய் மல்லையா, ஒருவழியாக வெளியேறினார்.
இந்த நிலைக்கு, அவர் உருவாக்கிய, ‘கிங்பிஷர் ஏர்லைன்ஸ்’ நிறுவனமே காரணமாக அமைந்தது தான் வேதனை.பெரும் ஆடம்பரத்துடன் துவங்கிய விமான சேவை, தொடர்ந்து இழப்பை சந்தித்து, ஒரு கட்டத்தில், ஊழியர்களுக்கு ஊதியம் கூட தர முடியாமல் திணறியது. இதையடுத்து, விமான சேவை நிறுத்தப்பட்டது. அடி மேல் அடியாக, விமான சேவை உரிமமும் காலாவதியாகி, கிங்பிஷர் ஏர்லைன்ஸ் மூடப்பட்டது.
இதனால், அந்நிறுவனத்திற்கு கொடுத்த, 7,000 கோடி ரூபாய் கடனை கேட்டு, வங்கிகள், விஜய் மல்லையாவை நெருக்கின.இத்துடன் இதர கடன்களை சமாளிக்க, விஜய் மல்லையா, தன் தந்தை உருவாக்கிய, யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் பங்குகளை, பிரிட்டனைச் சேர்ந்த, மதுபான நிறுவனமான, டியாஜியோவுக்கு விற்பனை செய்தார்.
இருந்தபோதிலும், தொடர்ந்து, அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் செயல்படாத இயக்குனர் பொறுப்புகளில் நீடித்து வந்தார். இந்த சூழ்நிலையில், டியாஜியோ, யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனப் பங்குகளை மேலும் வாங்கி, நிர்வாக குழுவில் பெரும்பான்மை பலம் பெற்றது. இதையடுத்து, புதிய இயக்குனர் குழு, கணக்குகளை ஆராய்ந்த போது, விஜய் மல்லையா, யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் பணத்தை, தன் யுனைடெட் புருவரீஸ் குழுமத்திற்கு முறைகேடாக வழங்கியது தெரியவந்தது.
இதை, டியாஜியோ பகிரங்கமாக கூறி, விஜய் மல்லையாவை, யுனைடெட் ஸ்பிரிட்ஸ் குழுமத்தின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுமாறு வற்புறுத்தியது. ஆனால், 3.99 சதவீத பங்குகளை மட்டுமே வைத்துள்ள விஜய் மல்லையா, பதவி விலக மறுத்து வந்தார். ஓராண்டாக நீடித்த இந்த மோதல் ஒருவழியாக, தற்போது முடிவிற்கு வந்துள்ளது.
டியாஜியோ, சில நிபந்தனைகளுடன், விஜய் மல்லையாவிற்கு, 515 கோடி ரூபாய் தரவும், அவர் மீதான குற்றச்சாட்டுகளை கைவிடவும் ஒப்புக் கொண்டது. அதுபோல, விஜய் மல்லையாவும், ‘பிரிட்டன் தவிர்த்து, உலக நாடுகளில், டியாஜியோவுக்கு போட்டியாக, மது விற்பனை மேற்கொள்ள மாட்டேன்’ என, ஒப்புக் கொண்டு உள்ளார். விஜய் மல்லையா, யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறினாலும், அவர் மகன் சித்தார்த், இயக்குனர் குழுவில், இரண்டு ஆண்டுகள் நீடிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், நான் பதவி விலகவும், நேரம் வந்து விட்டது. இந்த ஒப்பந்தம், என் குடும்ப கவுரவத்தை காப்பாற்றியுள்ளது.
விஜய் மல்லையா தலைவர், யுனைடெட் புருவரீஸ்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)