பதிவு செய்த நாள்
28 பிப்2016
06:19
புதுடில்லி : ஆதித்ய பிர்லா குழுமத்தைச் சேர்ந்த, அல்ட்ரா டெக் சிமென்ட் நிறுவனம், 5,400 கோடி ரூபாய் முதலீட்டில், ஜெயபிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனத்தின், இரு சிமென்ட் ஆலைகளை, சுண்ணாம்பு சுரங்கத்துடன் வாங்க முடிவு செய்திருந்தது. இதற்கான அனுமதி கோரி, மும்பை ஐகோர்ட்டில், அல்ட்ராடெக் விண்ணப்பித்தது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், ‘புதிய சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்ட திருத்தத்தின்படி, சுரங்கங்களின் உரிமையை மாற்ற முடியாது; ஏலம் மூலம் மட்டுமே விற்பனை செய்ய முடியும்’ என தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்தது. இதனால், ம.பி., மாநில பெலா மற்றும் சித்தியில் செயல்பட்டு வரும், ஜே.பி., அசோசியேட்ஸ் சிமென்ட் ஆலைகளை வாங்கும் திட்டம் கைவிடப்பட்டதாக, அல்ட்ராடெக் சிமென்ட் அறிவித்துள்ளது.கடந்த மாதம், லபார்ஜிஹோல்சிம் நிறுவனத்தின் இரு சிமென்ட் ஆலைகளை, வாங்கும் திட்டத்தையும், இதே காரணத்திற்காக, அல்ட்ராடெக் சிமென்ட் இழந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|