பதிவு செய்த நாள்
28 பிப்2016
06:22
கோல்கட்டா : ‘‘டிஜிட்டல் இந்தியா திட்டத்தால், ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தக வாய்ப்புள்ளது,’’ என, மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் கூறியதாவது:மத்திய அரசு, நாடு முழுவதும் தொலைதொடர்பு மற்றும் இணையதள சேவைகளை விரிவுபடுத்த, ‘டிஜிட்டல் இந்தியா’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் கம்ப்யூட்டர் சார்ந்த தொழில்கள் மட்டும் இன்றி தகவல் தொழில்நுட்பம், தொலை தொடர்பு, எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி ஆகிய துறைகளும் வளர்ச்சி அடையும். இதன் மூலம், ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தக வாய்ப்பு உள்ளது. இந்தியாவில், 125 கோடி மக்கள் உள்ளனர். இதில், 65 சதவீதம், 35 வயது மற்றும் அதற்கு கீழ் உள்ள இளைய சமுதாயத்தினர் என்பதால், டிஜிட்டல் இந்தியா திட்டம் வெற்றி அடையும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|