பதிவு செய்த நாள்
28 பிப்2016
06:23
புதுடில்லி : கடந்த, 2014 – 15ம் நிதியாண்டில், 64,395 புதிய நிறுவனங்கள், கம்பெனிகள் பதிவு சட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, பார்லிமென்டில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:நாட்டிலேயே, டில்லி மற்றும் மஹாராஷ்டிராவில் தான், அதிக நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. டில்லியில், அதிகபட்சமாக, 11,076 நிறுவனங்களும், மஹாராஷ்டிராவில், 11,020 நிறுவனங்களும், கம்பெனிகளும் பதிவு சட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்டுள்ளன. அடுத்த இடங்களில், உத்தர பிரதேசம், 5,989; கர்நாடகா, 5,025; தமிழகம், 4,867 ஆகியவை உள்ளன.மேற்கு வங்கம், தெலுங்கானாவில், முறையே, 4,155 மற்றும் 3,761 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|