பதிவு செய்த நாள்
28 பிப்2016
06:26
மும்பை : சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, 38 கோடி ரூபாய் கடன் நிலுவை வைத்துள்ள, யுனிடெக் நிறுவன இயக்குனர்களை, ‘கடனை திரும்ப தராதோர்’ பட்டியலில் சேர்த்துள்ளது. இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள அறிக்கை விவரம்: ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டு வரும் யுனிடெக் நிறுவனம், அதன் இயக்குனர்கள் மூலம், 300 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது. கடனை பலமுறை கேட்டும் பதிலளிக்காததால், இந்நிறுவன இயக்குனர்கள், கடனை திரும்ப தராதோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, யுனிடெக் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘நிறுவனம் வாங்கிய, 300 கோடி ரூபாயில், 264 கோடி ரூபாய் திரும்ப தரப்பட்டுள்ளது. எஞ்சிய தொகையை விரைவில் தந்து விடுவோம். நிறுவனத்தின் நிதிநிலை நன்கு உள்ளது’ என, தெரிவித்து உள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|